News March 18, 2024
ராணிப்பேட்டை: அத்துமீறிய பாதிரியார் மீது போக்சோ!

முத்துக்கடை பகுதியை சேர்ந்த பெர்லின் என்பவர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய மூத்த மகளிடம் பாதிரியார் ரகுராஜ்குமார் (54) என்பவர் பாலியல் அத்துமீறலில் கொடுத்துள்ளார். ஆதலால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷாதின் நேற்று(மார்ச் 17) பாதிரியார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளார்.
Similar News
News January 12, 2026
ராணிப்பேட்டையில் அதிரடி கைது!

கந்திலி போலீசார் நேற்று முன் தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரியம்பட்டி அருகே சந்தேகத்தின் பேரில் இருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த வனிதா(40) என்பதும், டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்தனர். மேலும், கடலரசன்(30) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
News January 12, 2026
ராணிப்பேட்டையில் பயங்கர தகராறு!

கந்திலி அருகே உள்ள பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சகுந்தலா(35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கும் முன் விரோதம் இருந்து வந்ததி. நேற்று முன் தினம் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரில் மகேஸ்வரி, காமராஜ், சகுந்தலா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News January 12, 2026
ராணிப்பேட்டையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் கதிரவன் (18). நேற்று(ஜனவரி 11) தனது வீட்டில் கதிரவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து எதற்காக இருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


