News October 19, 2024
மன்னிப்பு போலி தகவல்: கமிஷனர் அருண் விளக்கம்

கமிஷனர் அருண் சார்பில் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவர் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், “நான் மன்னிப்பு கேட்கவில்லை. என் விளக்கத்தை ஏற்று மாநில மனித உரிமைகள் கமிஷன், வழக்கிலிருந்து என்னை விடுவித்துள்ளது. அவ்வளவு தான்” என கமிஷனர் அருண் இன்று விளக்கம் அளித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்டதாக தவறான தகவல் பரவியதால், அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
மெரினா நீச்சல் குளம் 20 நாட்களுக்கு இயங்காது

மெரினா நீச்சல் குளம், தண்ணீர் சுத்திகரிப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக 20 நாட்கள் மூடப்படுகிறது. ஜூலை 11, 2025 முதல் ஜூலை 31, 2025 வரை (20 நாட்கள்) நீச்சல் குளம் இயங்காது. பைப் அமைத்தல், 180 மீ விட்டம் கொண்ட 9 புதிய ஊறுகுழிகள் பொருத்துதல், மற்றும் சோதனை வெள்ளோட்டம் உள்ளிட்ட பணிகள் தங்குதடையின்றி நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்தப் பணிகள் நீச்சல் குளத்தின் தரமான செயல்பாட்டிற்கு உதவும்.
News July 9, 2025
சென்னை உயர் நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி மீது காட்டம்

சென்னை உயர் நீதிமன்றம், ராயபுரம் மண்டல அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் குறித்து நடவடிக்கை எடுக்காத சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தது. இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஐஏஎஸ் அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என்று தன்னை நினைத்துக் கொள்கிறாரா?” எனக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளது.
News July 9, 2025
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 17 வேலைவாய்ப்புகள்

சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் 17 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.dcourts.gov.in/ ஐப் பார்வையிட்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம். இது குறித்த அறிவிப்பை சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.