News March 18, 2024
நாமக்கல்லில் தீவிர சோதனை

பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா. நேற்று திருச்சி நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள எம்.மேட்டுப்பட்டி, சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். இதனிடையே நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய இரண்டுக்கும் 5, 58, 400 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
மருத்துவ மாணவி கழிவறையில் சடலமாக மீட்பு

கோவை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டியை சேர்ந்த பவபூரணி, 29 முதுகலை மயக்க மருந்தியல் படித்து வந்தார். இவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்கை பிரிவில், 5ம் தேதி இரவு பணியில் இருந்தார். நேற்று காலை அவர். மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்ததை பார்த்த ஊழியர்கள், பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
News July 7, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன ரோந்து போலீசார் விபரம் !

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 6 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி (9443833538) ராசிபுரம் – ( 9498169110), பள்ளிபாளையம்- ( 9498110876), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – கலைச்செல்வன் ( 9952424705), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .
News July 6, 2025
நாமக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 6) நாமக்கல்- கபிலன் ( 9711043610), ராசிபுரம்- அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு தவமணி – (9443736199), வேலூர் – தேவி ( 9842788031), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.