News October 19, 2024
22 ஆம் தேதி முக்கிய சம்பவம்: வானிலை ஆய்வாளர் தகவல்

நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா நேற்று(அக்.18) விடுத்துள்ள வானிலை பதிவில், வங்க கடல் பகுதிகளில் அக்டோபர் 22ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இதனிடையே நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
Similar News
News August 25, 2025
நெல்லை பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

நெல்லை பேருந்து நிலையத்தில் 6 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், திசையன்விளை,களக்குடி, ரெட்டியார்பட்டி, கீழப்பிள்ளையார்குளம் உட்பட நெல்லையில் உள்ள பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <
News August 25, 2025
நெல்லையில் இன்று கல்வித்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் நாளை காலை 11:15 மணி அளவில் பாளை நேருஜி கலையரங்கில் மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கல்வித்துறை அலுவலர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
News August 25, 2025
முன்னீர்பள்ளம் தீ விபத்தில் புதிய தகவல்

திருநெல்வேலி ஆரைகுளத்தில் மகனின் திருமணத்திற்கு அழைக்காத கோபத்தில் தந்தை, மனைவி மற்றும் மற்றொரு மகனின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம் நடந்துள்ளது. இதில் மனைவி மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் 50 % காயங்களுடன் தந்தை உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். மூத்த மகனுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில் மனைவியுடன் அவர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். குடும்பத் தகராறு இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியது.