News March 18, 2024
அரசியலில் களமிறங்கும் லாலு பிரசாத் யாதவின் மகள்?

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. அவ்வாறு அவர் அரசியலுக்கு வந்தால், அவரது உடன்பிறப்புகளான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் மற்றும் மிசா பார்தி ஆகியோரை தொடர்ந்து, அரசியலுக்கு வரும் யாதவ் குடும்பத்தின் நான்காவது வாரிசாக ஆச்சார்யா இருப்பார்.
Similar News
News April 7, 2025
ஹாஸ்பிடலில் SRH பவுலர்!

SRH பவுலர் ஹர்ஷல் படேல், நோய் பாதிப்பின் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், அவருக்கு கரெக்ட்டாக என்ன பிரச்னை என்ற தகவல் ஏதும் இல்லை. இதனால்தான் அவர், GT அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை. IPL ஏலத்தில் ₹8 கோடிக்கு ஹர்ஷல் படேலை SRH வாங்கியது. பவுலிங்கில் தடுமாறி வரும் SRHல், அவர் விளையாடி இருக்க வேண்டும் என SRH ஃபேன்ஸ் பறிதவித்து வருகின்றனர்.
News April 7, 2025
ராகுலுக்கு கேரள பாஜக கண்டனம்!

பாஜக, RSSன் பார்வை சர்ச் நிலங்கள் மீது திரும்பியிருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். முதலில் அரசமைப்பை நன்கு படியுங்கள் என கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே, தேயிலை தோட்ட உரிமையாளர்கள் போல சொந்தமாக நிலங்கள் வைத்திருப்பது தவறல்ல. கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் போல மக்களிடம் இருந்து பறிப்பதுதான் தவறு. அதைதான் வக்பு வாரியம் செய்தது என விமர்சித்துள்ளார்.
News April 7, 2025
CSK-வின் அடுத்த ஆட்டம்.. இன்று டிக்கெட் விற்பனை

CSK – KKR அணிகள் வரும் 11-ம் தேதி சேப்பாக்கத்தில் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 09:30 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. கடந்த முறை டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. என்னதான் CSK தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும் நிச்சயம் அதில் இருந்து மீண்டு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீங்க டிக்கெட் வாங்க ரெடியா?