News March 18, 2024
அரசியலில் களமிறங்கும் லாலு பிரசாத் யாதவின் மகள்?

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. அவ்வாறு அவர் அரசியலுக்கு வந்தால், அவரது உடன்பிறப்புகளான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் மற்றும் மிசா பார்தி ஆகியோரை தொடர்ந்து, அரசியலுக்கு வரும் யாதவ் குடும்பத்தின் நான்காவது வாரிசாக ஆச்சார்யா இருப்பார்.
Similar News
News January 26, 2026
பாஜக குறித்து விஜய் பேசாதது ஏன்? அருண்ராஜ் பதில்

தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், பாஜகவின் பெயரையே பயன்படுத்தவில்லையே என்ற கேள்விக்கு அருண்ராஜ் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு தேர்தல் களத்தில் இருக்கும் கட்சியை குறித்து மட்டுமே விஜய் பேசியதாக அவர் விளக்கமளித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை எனவும், இந்த தேர்தலில் திமுக – தவெக இடையே மட்டுமே போட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 26, 2026
உலகின் மிக பழமையான கொடி எது தெரியுமா?

தேசியக்கொடி என்பது அடையாளம் மட்டுமின்றி, மக்களுடன் இரண்டற கலந்த எமோஷனாகும். காலத்திற்கு ஏற்றார் போல பல நாட்டின் கொடிகள் மாறினாலும், 1625-ல் இருந்து ஒரு நாடு இப்போது வரை ஒரே கொடியை பயன்படுத்தி வருகிறது. நாம் பயன்படுத்தும் இந்தியாவின் தேசியகொடி 1947-ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி என்றால் உலகின் பழமையான கொடி என்பதை அறிய மேலே உள்ள படத்தை இடது பக்கமாக Swipe பண்ணுங்க.
News January 26, 2026
ஊழல் பல்கலை.,யின் வேந்தர் PM மோடி: உதயநிதி

இந்தியாவில் ஊழலுக்கு ஒரு பல்கலை., இருந்தால் அதற்கு PM மோடி தான் வேந்தர் என உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு குறித்தும், ஊழல் குறித்தும் பேச PM மோடி, அமித்ஷாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை வைத்துக் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மோடி முயல்வதாகவும் சாடியுள்ளார்.


