News March 18, 2024
அரசியலில் களமிறங்கும் லாலு பிரசாத் யாதவின் மகள்?

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. அவ்வாறு அவர் அரசியலுக்கு வந்தால், அவரது உடன்பிறப்புகளான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் மற்றும் மிசா பார்தி ஆகியோரை தொடர்ந்து, அரசியலுக்கு வரும் யாதவ் குடும்பத்தின் நான்காவது வாரிசாக ஆச்சார்யா இருப்பார்.
Similar News
News September 9, 2025
11 மாவட்டங்களில் கனமழை அலர்ட்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
News September 9, 2025
வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யும் PM மோடி

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களை PM மோடி இன்று பார்வையிட உள்ளார். பிற்பகல் 1.30 மணியளவில் ஹிமாச்சல் செல்லும் அவர், உயரதிகாரிகளை சந்தித்து சூழ்நிலை குறித்து ஆய்வு செய்யவுள்ளார். தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு 3 மணிக்கு மேல் பஞ்சாப் செல்ல திட்டமிட்டுள்ளார்.
News September 9, 2025
புரதச்சத்து நிறைந்த டாப் 5 உணவுகள்

உடலில் புது செல்கள் உருவாவதற்கும், சேதமடைந்த செல்களை சரிசெய்வதற்கும் புரதச்சத்து மிக அவசியமானது. குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்தை போதுமான அளவு கொடுக்க வேண்டும். நாம் நமது உடல் எடைக்கு ஏற்ப அன்றாடம் புரதச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உதாரணமாக 70 கிலோ எடையுள்ள நபர் 55 முதல் 70 கிராம் புரதம் சாப்பிடுவது நல்லது.