News March 18, 2024
திருவண்ணாமலையில் குறைதீர் கூட்டம் ரத்து!

திருவண்ணாமலையில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
வந்தவாசியில் பயங்கரம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பத்திர எழுத்தர் இந்திரன் என்பவரை, அந்த கும்பல் கத்தியால் வெட்டியது. இதில் காலில் பலத்த காயமடைந்த இந்திரனுக்கு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் 18 தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News January 12, 2026
திருவண்ணாமலையில் துடிதுடித்து பலி!

போளூர் அருகே, மட்டபிறையூரிலிருந்து மொடையூர் கிராமத்திற்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்த நண்பர்கள் விஜய் (25) மற்றும் விக்னேஷ் (16) ஆகிய இருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போளூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
News January 12, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (11.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். மேலும், ரோந்து காவலர் தொலைபேசி என்ணை மேலே காணலாம். அவசர தேவைக்கு மேலே உள்ள இரவு ரோந்து காவலர் தொலை பேசி என்னை அழைக்கவும். ஷேர் செய்யவும்.


