News October 19, 2024
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். 10ஆம் வகுப்பில் தோல்வி – ரூ.200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி – ரூ.300, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி – ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 16, 2025
ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் கொல்லம் மெயில் மற்றும் குருவாயூர் விரைவு ஆகிய ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்படும் நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News August 15, 2025
செங்கல்பட்டில் கழுகுகள் வணங்கும் அதிசய கோயில்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரிமலையில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு கழுகுகள் வணங்கிய பெருமை உண்டு. கிரேதா யுகத்தில் சண்டன் – பிரசண்டன், திரேதா யுகத்தில் சம்பாதி – சடாயு, துவாபர யுகத்தில் சம்புகுந்தன் – மாகுந்தன் ஆகியோர் சாபத்தினால் கழுகுகளாக உருமாறி, வேதகிரீஸ்வரை வணங்கி சாபவிமோசனம் பெற்றனர். இங்கு வந்து சென்றால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News August 15, 2025
செங்கல்பட்டு: உள்ளூரிலேயே 25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில்Assembly Line Machine Setter பணிக்கான 40 காலிப்பணியிடங்கள் உள்ளது. பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் <