News October 19, 2024

ஆளுநரையும், மக்களையும் பிரிக்க முடியாது: தமிழக பாஜக

image

ஆளுநரையும், மக்களையும் திராவிட மாடல் பாேலி அரசியல்வாதிகளால் பிரிக்க முடியாது என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் மகிழ்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சியில் ஆளுநர் மிகுந்த அக்கறை கொண்டவர் எனக் கூறியுள்ளார். ஆளுநரை திமுக கூட்டணி கட்சிகள் அவதூறு பேசலாம். ஆனால் அதற்கு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News August 9, 2025

நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்: EPS

image

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என EPS கூறியுள்ளார். அருப்புக்கோட்டையில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி கொள்கை கொண்டுவரப்பட்டது என்றார். மேலும், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், பசுமை வீடு வழங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன், ஒவ்வொரு தீபாவளிக்கும் பெண்களுக்கு புடவை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

News August 9, 2025

டிராபிக் போலீஸ் ஸ்பாட் ஃபைன் கட்ட சொல்லி மிரட்டினால்..

image

சரியான டாக்குமெண்ட் இல்லாமல் சென்று டிராபிக் போலீசிடம் சிக்கினால், உடனடியாக ஸ்பாட் ஃபைன் கட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களிடம் E-challan பெற்றுக் கொண்டு, அடுத்த 60 நாள்களில் ‘mParivahan’ செயலி மூலம் ஃபைன் கட்டலாம். டிராபிக் போலீஸ் அடாவடித்தனமாக நடந்துக் கொண்டால், அவர்கள் குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். அடிக்கடி போலீஸ்கிட்ட சிக்கும் Friends-க்கு இத ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

BREAKING: எல்லையில் மீண்டும் மோதல்.. 2 வீரர்கள் மரணம்

image

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் நமது ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். குல்காம் மாவட்டத்தில் தொடர்ந்து 8-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலையில் நடந்த பயங்கர மோதலில் இந்த துயரம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!