News October 19, 2024

வேலூர் காவல் துறை சார்பில் ஊக்கத்தொகை

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2023-2024-ம் கல்வி ஆண்டில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 20 மாணவ/மாணவியர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், காவலர் சேமநல நிதியிலிருந்து ரூபாய்.1,23,000/- பணத்தை ஊக்கத்தொகையாக நேற்று  அக்டோபர் 18 வழங்கினார்.

Similar News

News July 10, 2025

வேலூர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை(0416-2252345) அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17015879>>தொடர்ச்சி<<>>

News July 10, 2025

கலைஞர் கனவு இல்லத் திட்ட விவரங்கள்

image

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*

News July 10, 2025

வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி தெரிஞ்சிக்கோங்க

image

வேலூர் சிப்பாய் கலகம் 1806-ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 10) நடந்தது. இது இந்தியாவின் முதல் கிளர்ச்சி எனும் சிறப்பைப் பெற்றது. இந்த கலகத்திற்கு முக்கியமான காரணம், சிப்பாய்களின் மத உணர்வுகளை புறக்கணித்து, புதிய உடை விதிகளை பிரித்தானியர்கள் கட்டாயமாக்கியது ஆகும். இதில், 200க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் கொல்லப்பட்டனர். இது சுதந்திரப் போராட்டத்தின் முதல் துடிப்பாகக் கருதப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!