News October 19, 2024
உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியர் அழைப்பு

தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் (7%) ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்பட உள்ளன. இதனால் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களை மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News August 21, 2025
கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (20/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
சிவாயம்: ஊராட்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாளை (ஆக.21) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குமராட்சி அடுத்த சிவாயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி, பண்ருட்டி சசிகலா திருமண மண்டபம், திருமங்கலம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மற்றும் விருத்தாசலம் அடுத்த எடசித்தூர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
கடலூர்: தமிழ் தெரிந்தால் போதும்.. வங்கியில் வேலை

கடலூர் மக்களே.. தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த நன்கு தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <