News October 18, 2024

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (18.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ அழைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏதேனும் அசாதாரண சம்பவங்கள் நடைபெற்றால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News July 10, 2025

புதுக்கோட்டை : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க

News July 10, 2025

கணவர் மடியில் உயிரிழந்த மனைவி

image

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமநாதன் தெய்வானை தம்பதியினர் குற்றாலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு குளித்து விட்டு நடந்து செல்லும் பாதையில் அமர்ந்திருந்த பொழுது உடற்சோர்வு காரணமாக கணவர் மடியில் தெய்வானை சாய்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென கணவர் மடியிலேயே தெய்வானை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News July 10, 2025

சமூக நல்லிணக்க விருது; ஆட்சியர் அறிவிப்பு

image

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்கப்படுத்தவும் கௌரவ படுத்துவதற்கும் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ.1 கோடி வழங்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருதை பெற தகுதியான புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மாலை அறிவிப்புத்துள்ளார்.

error: Content is protected !!