News March 18, 2024
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வரலாறு

வாக்காளர் அடையாள அட்டையில் ஆரம்ப காலத்தில் வாக்காளர்களின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. 1957 இல், புகைப்பட அடையாள அட்டைகளை வழங்குவதற்கான யோசனை உருவானது. 1979 சிக்கிம் தேர்தலிலும், பின்னர் வடகிழக்கு மாநிலங்களிலும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1994 இல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1997ல் வாக்காளர் பட்டியல் கணினிமயமாக்கல் துவங்கியது.
Similar News
News October 30, 2025
‘சக்தித் திருமகன்’ திருட்டு கதையா?

விஜய் ஆண்டனி நடித்த ‘சக்தித் திருமகன்’ படத்தின் கதை தன்னுடையது என கூறி, அதற்கான சில ஆவணங்களை இணைத்து சுபாஷ் சந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு, 2014-ல் இருந்தே எழுதப்பட்ட கதை என தெரிவித்துள்ளார். மேலும், இன்னொருவர் கதையை திருடி எழுத வேண்டிய இயலாமை தனக்கில்லை என்றும் கூறியுள்ளார்.
News October 30, 2025
கேரளாவில் தொடங்கிய SIR

<<18130099>>கேரளாவில் <<>>ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட பிரதான கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல் Enumeration Form அம்மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது. SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
ADMM-Plus மாநாடு: மலேசியா செல்கிறார் ராஜ்நாத் சிங்

மலேசியாவில் ASEAN மாநாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து, நவ.1-ம் தேதி ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பின் பிளஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் மலேசியா புறப்படுகிறார். ADMM-Plus மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.


