News March 18, 2024
வாக்காளர் பட்டியலில் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், வேட்புமனுத் தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை, பணிகள் குறித்து எடுத்துரைக்கும் சாகு, வாக்காளர் பட்டியலுடன் துணை வாக்காளர் பட்டியலை சேர்ப்பது தொடர்பாக கருத்து கேட்கிறார்.
Similar News
News August 13, 2025
‘மதராஸி’ படத்தின் கதை இதுதானா?

‘மதராஸி’ படம் அடிப்படையில் காதல் கதையாம். இந்த காதலால் தமிழ்நாட்டில் பணியாற்றும் படக்குழுவிற்கும், வட இந்திய மாஃபியா கும்பலுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தியாகங்கள், பழிவாங்கலை சேர்த்து முருகதாஸ் படமாக உருவாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். முன்னதாக, கஜினியும், துப்பாக்கியும் சேர்ந்ததுதான் இந்த படம் என முருகதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 5-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.
News August 13, 2025
இந்தியாவில் நுழைய போட்டி போடும் உலக நிறுவனங்கள்

ஸ்டார்லிங்க்கிற்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில், உலகளவில் உள்ள Satcom நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளன. லக்ஸம்பர்க்கின் Intelsat, பிரிட்டனின் Inmarsat, சிங்கப்பூரின் டெலிகாம், கொரியாவின் KT SAT, தாய்லாந்தின் IPSTAR, இந்தோனேஷியாவின் PT Telekomunikasi உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைத்துள்ளன. ஏற்கெனவே அமேசானின் Kuiper அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.
News August 13, 2025
ODI தரவரிசை: மாஸ் காட்டும் இந்தியாவின் டாப் 3!

வெளியிடப்பட்டுள்ள ODI தரவரிசையில், இந்தியாவின் சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். கில் 1-ம் இடத்திலும், ரோஹித் 2-ம் இடத்திலும், கோலி 4-ம் இடத்திலும் உள்ளனர். இது ODI ஃபார்மெட்டில் இந்திய பேட்டர்களின் ஆதிக்கத்தை காட்டுகிறது. ODI-யில் இருந்து ரோஹித், கோலி இருவரும் ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனத்திற்கு இது பதிலடியாகவும் அமைந்துள்ளது.