News October 18, 2024

‘ஈஷா யோகா மையத்தில் விசாரிக்க தடை இல்லை’

image

ஈஷா யோகா மையத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் உள்ளதால் விசாரிக்க தடை விதிக்க கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள தடை இல்லை’ என தெரிவித்தனர். வழக்கு விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Similar News

News July 10, 2025

கோவையில் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை

image

கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இரண்டு நிபா வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், கோவையில் அச்சப்பட வேண்டிய சூழல் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவையில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை, எனினும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 9, 2025

கோவை: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

image

கோவை மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!