News October 18, 2024

செங்கல்பட்டு- காஞ்சிபுரம் சாலையில் திடீர் பள்ளம்

image

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லக்கூடிய சாலையில் ஐந்தடி ஆழம் மற்றும் மூன்றடி அகலத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்த சாலையின் குறுக்கே கால்வாய் செல்வதால் சிமெண்ட் கான்கிரிட் கொண்டு அமைக்கப்பட்ட சாலையில் பள்ளம் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பள்ளிகள், பதிவுத்துறை அலுவலகம் செல்லும் முக்கிய சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News July 10, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (ஜூலை 09) இரவு ரோந்து பணி பார்க்கும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக, மக்களின் தொடர்புக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரம் தேவை என்றால், புகைப்படத்தில் கொடுத்துள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு நேர வேலைக்கு செல்லும் பெண்கள், இந்த தொலைபேசி எண்களை கண்டிப்பாக வைத்திருங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணிடுங்க மக்களே!

News July 9, 2025

ஆபத்துகளில் இருந்து காக்கும் குளுந்தியம்மன்

image

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குளுந்தியம்மன் கோயில். குளுந்தியம்மன் இங்கு ஊர்காப்பு அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குளுந்தியம்மன் “ஊர்காப்பு அம்மன்” ஆக இருப்பதால், ஊரையும் மக்களையும் ஆபத்துகளில் இருந்து காத்து ரட்சிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இங்கு வந்து வழிபடுகின்றனர். மற்றவர்களுக்கு இதை பகிருங்கள்!

News July 9, 2025

தார்ப்பாய் இல்லாமல் செல்லும் லாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் சவுடு மண் மற்றும் ஜல்லி ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் இல்லாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் மண் பரவி விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தார்ப்பாய் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!