News October 18, 2024
தருமபுரி கல்வி கடன் மற்றும் தொழில் கடன் வழங்கல்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் இன்று நடைபெற்ற தொழிற்கடன் வசதியாக்கல் மற்றும் கல்விக் கடன் முகாமில் 24 நபர்களுக்கு ரூ.12.76 கோடி மதிப்பீட்டில் தொழிற்கடன் மற்றும் கல்வி கடன்களை மாவட்ட ஆட்சித்தலைவர், கி. சாந்தி வழங்கினார். உடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், பிரசன்ன பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News July 10, 2025
தர்மபுரியில் கலெக்டர் ஆய்வு

நல்லம்பள்ளி வட்டம், சோமனஅள்ளி கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வேளாண்மை இயந்திரங்கள் மேளாவில் (District Level Agri.Machinery Mela) தென்னை மட்டை தூளாக்கும் கருவி மற்றும் டிரோன் (மருந்து தெளிப்பான்) மூலம் மருந்து தெளிக்கும் கருவி ஆகியவற்றின் செய்முறை செயல் விளக்கம் நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், பார்வையிட்டார்.
News July 9, 2025
காவல்துறை இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று இரவு ரோந்து பணிக்கான பொறுப்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அலுவலராக டிஎஸ்பி ஆர். ராஜசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்புக்கொள்ள எண்கள் மேலே உள்ளது. பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம்.
News July 9, 2025
மாணவர்களுக்கு முக்கியமான செய்தி

செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊடக மையம் நடத்தும் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான என் பள்ளி என் பெருமை கலைநிகழ்ச்சி. மாணவர்களுக்கு என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி, ரீல்ஸ் மற்றும் ஓவியப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு உங்கள் பள்ளியில் நீங்கள் எடுத்த முன்னெடுப்புகள் ரீல்ஸ் போட்டி. மேலும் விவரங்களுக்கு க்யூஆர் கோட் ஸ்கேன் செய்க.