News October 18, 2024

சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் மனைவி மணிமேகலை மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்தது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை நவ.15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News July 9, 2025

விருதுநகர்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

image

இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், வெடி பொருட்கள் தலைமை கட்டுப்பாட்டாளர் தலைமையில் 2 குழுக்கள் அமைத்தும், பட்டாசு ஆலைகளை 10 நாள்களுக்குள் ஆய்வு செய்யவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகரில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

News July 9, 2025

எட்டூர்வட்டம் சுங்கச்சாவடியில் அரசு பஸ் செல்லத் தடை

image

தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குனேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில் வரும் 10ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், மேற்கண்ட 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள் தொடந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 9, 2025

விருதுநகரில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!