News October 18, 2024
தமிழகத்தில் இந்திக்கு விழா: முதல்வர் ஆவேசம்

சென்னை DD தொலைக்காட்சி சார்பில் இன்று நடைபெறவுள்ள இந்தி மாதக் கொண்டாட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அரசமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய அந்தஸ்தை கொடுக்கவில்லை. அப்படியிருக்கையில், இந்தி மொழிக்கு மட்டும் கொண்டாட்டம் எதற்கு? இது உள்ளூர் மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி. எனவே, இந்தக் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News July 6, 2025
60 நாள்கள்; 9 மணி நேர தூக்கம்.. ₹9.1 லட்சம் வென்ற இளம்பெண்

‘Wakefit’ நடத்திய போட்டியில் புனேவை சேர்ந்த பூஜா மாதவ்(22), 60 நாள்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 9 மணி நேரம் தூங்கி ₹9.1 லட்சம் பரிசு வென்றுள்ளார். 4-வது ஆண்டாக இந்த ‘Sleep Champion of the Year’ போட்டி நடந்தது. நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் அப்ளை செய்த நிலையில் 15 பேர் மட்டுமே இறுதியாக தேர்வாகியிருந்தனர். இந்தாண்டு பரிசு வென்ற பூஜா UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறாராம்.
News July 6, 2025
ரெட் ஜெயன்ட் பாணியில் களமிறங்கும் விஜய்?

ஜேசன் சஞ்சய் இயக்கிவரும் படத்தின் BTS காட்சிகளில், லைகா உடன் ‘JSJ’ என்ற தயாரிப்பு நிறுவன பெயரும் இடம்பெற்றிருந்தது. இது ஜேசனின் கம்பெனி என அப்போது தகவல் வெளியானது. இந்நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் மாத இதழில், பதிவு செய்யப்பட்ட புதிய Producers பட்டியலில் சஞ்சய்யின் பெயரும் உள்ளது. இதனால், உதயநிதி பாணியில் மகன் மூலம் தயாரிப்பில் இறங்குகிறாரா விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது.
News July 6, 2025
திருச்செந்தூர் கோவிலுக்கு ₹206 கோடி வழங்கிய சிவ் நாடார்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் சீரமைப்புப் பணிகளுக்காக, தொழிலதிபர் சிவ் நாடார் ₹206 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார். சிவ் நாடாரின் ‘வாமா சுந்தரி அறக்கட்டளை’ மூலமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 7, திங்கட்கிழமை) திருச்செந்தூர் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.