News October 18, 2024
ஆடைகளை கழற்றிய பெண்: ₹5 லட்சமும் போச்சு!

அகமதாபாத்தில் பெண் ஒருவருக்கு, டெல்லி cyber crime அதிகாரி எனக் கூறி ஒருவர் போன் செய்துள்ளார். அப்பெண்ணின் பெயரில் போதை மருந்து, லேப்டாப்கள் தாய்லாந்துக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விசாரணை என்று அப்பெண்ணை மிரட்டி வெப் கேமரா முன் ஆடைகளை கழற்ற வைத்துள்ளதுடன், சிறைக்கு அனுப்பாமல் இருக்க பணம் கேட்டுள்ளார். பயத்தில் அப்பெண்ணும் அக்கவுண்ட்டில் இருந்த ₹5 லட்சத்தை அனுப்பி ஏமாந்தார்.
Similar News
News August 28, 2025
ஆசியக் கோப்பை: மெளனம் கலைத்த ஷமி

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாதது பேசுபொருளானது. இதுதொடர்பாக பேசிய அவர், துலீப் டிராபி தொடரில் தன்னால் ஒரு போட்டியில் 5 நாள்கள் விளையாடும்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாட முடியாதா என கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்திய அணியின் வெற்றிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தேர்வுக் குழுவின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். ஷமியை தேர்வு செய்யாதது பற்றி என்ன நினைக்கிறீங்க?
News August 28, 2025
PM மோடியின் தாயாரை இழிவுபடுத்திய தொண்டர்கள்

பிஹாரில் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் PM மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை மிகவும் தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களை ஏற்காது என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இதை சகித்துக் கொள்ள முடியாது எனவும், ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
News August 28, 2025
கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்

கடந்த 2015-ல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அஹமது உயிரிழந்த விவகாரத்தில், 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது. இந்நிலையில், இதுதொடர்பாக 6 கட்டங்களாக பதியப்பட்ட வழக்கில் 22 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ள திருப்பத்தூர் கோர்ட், 161 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இஸ்லாம் பாஷாவின் சொத்துகளை முடக்குமாறும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.