News October 18, 2024
எதிர்பார்ப்பு இல்லாமல் உழைப்பவர்களுக்கு பதவி: ஆனந்த்

சேலம், ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு பேசும்போது, தமிழக வெற்றி கழகத்தில் பதவி நிரந்தரமானது அல்ல. எதிர்பார்ப்பு இல்லாமல் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்கும் என தெரிவித்தார். மாவட்ட தலைவர் பார்த்திபன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
Similar News
News August 28, 2025
சேலம் அருகே நகைக்கடை உரிமையாளர் அடித்துக் கொலை!

சுக்கம்பட்டியை சேர்ந்தவர் நகை கடை உரிமையாளர் ரமேஷ் (35). இவர் குள்ளம்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடை அருகே நேற்று மது அருந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சிலர் ரமேஷை கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் உயிர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News August 28, 2025
ஆக.29 எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்குகிறார். இதில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு உருளைகள் பதிவு செய்வதிலும், வினியோகம் செய்வதிலும் உள்ள குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம்.
News August 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.27) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.