News October 18, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: ஆட்சியர்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.18) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேற்று பகல் நேரங்களில் மழை பெய்யாத நிலையில், நள்ளிரவு முதல் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது. தற்போது, சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை மற்றும் ரெயின் கோர்ட் கொண்டு செல்ல்லுங்கள்.

Similar News

News July 9, 2025

சென்னையில் 1002 ரவுடிகள் குண்டாஸில் கைது

image

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி முதல் நேற்று வரை 1,002 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்ட அலுவலக பிரிவில் பணிபுரிந்து வருவோருக்கு கமிஷனர் அருண் வெகுமதி வழங்கினார். *ரவுடிகளின் கூடாரமாக உள்ளதா சென்னை?*

News July 9, 2025

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அறிவிப்பு

image

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கூட்டம் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக, முதல்வர் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News July 9, 2025

சிறுமிக்கு தொல்லை வாலிபர் கைது

image

சென்னை மணலி புதுநகரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட், பொம்மை தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் முரளி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!