News March 18, 2024

நெல்லை மாவட்ட காவல்துறை முக்கிய அறிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று மாலை விடுத்துள்ள அறிவிப்பில், தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் குறுஞ்செய்திகள் வழியாகவோ சமூக ஊடகங்கள் வழியாகவோ பரப்பினால் 24 மணி நேரமும் செயல்படும் காவல்துறை கைபேசி எண் 9498101765 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 26, 2025

நெல்லை: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக்<<>> பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

News October 26, 2025

நெல்லை: சூரசம்ஹார பக்தர்ளுக்கு சிறப்பு ரயில்

image

சூரசம்கார விழாவை காண்பதற்காக தமிழக முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 09.35 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் மதுரை வழியாக மறுநாள் காலை அதாவது கந்த சஷ்டி அன்று காலை 8 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும். அதே நாள் இரவு 10:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக தாம்பரம் செல்லும்.

News October 26, 2025

நெல்லை: இ எஸ் ஐ பி எஃப் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லையில் நடப்பு மாதத்திற்கான இ எஸ் ஐ பி எஃப் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27ம் தேதி அம்பாசமுத்திரம் தாலுகா பாபநாசம் மெயின் ரோடு ரயில் நிலையம் எதிரில் உள்ள விகாசா ஸ்ரீ ஸ்ரீ அகாடமி வளாகத்தில் காலை 9 மணி முதல் நடைபெறும். இதில் இஎஸ்ஐ காப்பீட்டாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் பங்கேற்று பயனடையலாம் என மண்டல துணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!