News October 18, 2024
விராலூர் ஊராட்சியில் மழையினால் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது

விராலூர் ஊராட்சியில் வெற்றிக்காடு கிராமத்தில் கனமழை பெய்தால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மேலும், இடிந்து விழுந்த குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய தொட்டி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளன.
Similar News
News July 9, 2025
ஆபத்துகளில் இருந்து காக்கும் குளுந்தியம்மன்

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குளுந்தியம்மன் கோயில். குளுந்தியம்மன் இங்கு ஊர்காப்பு அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குளுந்தியம்மன் “ஊர்காப்பு அம்மன்” ஆக இருப்பதால், ஊரையும் மக்களையும் ஆபத்துகளில் இருந்து காத்து ரட்சிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இங்கு வந்து வழிபடுகின்றனர். மற்றவர்களுக்கு இதை பகிருங்கள்!
News July 9, 2025
தார்ப்பாய் இல்லாமல் செல்லும் லாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சவுடு மண் மற்றும் ஜல்லி ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் இல்லாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் மண் பரவி விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தார்ப்பாய் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
News July 9, 2025
திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வரும் நேரம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. அதன்படி, ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை (ஜூலை 10, 2025) அதிகாலை 2:30 மணிக்குத் தொடங்கி, ஜூலை 11, 2025 அதிகாலை 3:15 மணி வரை பக்தர்கள் வலம் வர உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அனைவரும் கிரிவலம் வந்து இறைவனின் அருளைப் பெறலாம். ஷேர் பண்ணுங்க மக்களே!