News March 18, 2024

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக புதிய வழக்கு

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாகப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரையிலான விவரங்களையும் வெளியிட வேண்டும் என ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

Similar News

News November 1, 2025

தங்கம் விலை தாறுமாறாக மாறுகிறது

image

தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அதிகரித்தே வருகிறது. இம்மாத தொடக்கத்தில் 22 கேரட் தங்கம் சவரன் ₹87,600 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து அக்.16-ல் ₹95,200-ஐ தொட்டது. அடுத்த 2 வாரம் குறைந்துவந்து இன்று ₹90,400-ல் நிற்கிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டிக் குறைப்பு, USA-சீன உடன்பாடு போன்ற காரணங்களால் சற்றே குறைந்தாலும், டிசம்பர் வரை பெரிதாக விலைக் குறைய வாய்ப்பில்லையாம்.

News October 31, 2025

திறனாய்வு தேர்வு: செவ்வாய்க்கிழமையே கடைசி!

image

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் செவ்வாய்கிழமை(நவ.4) கடைசி நாளாகும்.

News October 31, 2025

வறுமையை ஒழித்த மாநிலமாகும் கேரளா

image

தீவிர வறுமையை (Extreme Poverty) மாநிலத்தில் இருந்து ஒழித்துவிட்டதாக கேரள அரசு, நாளை (நவ.1)அறிவிக்க உள்ளது. உலக வங்கியின் வரையறைப்படி, ஒருவரின் தினசரி வருமானம் ₹168-க்கு குறைவாக இருந்தால், அவர் தீவிர வறுமையில் இருப்பதாக கொள்ளப்படும். இந்நிலையில் உணவு, உறைவிடம், உடைகள், சுகாதார வசதி, குறைந்தபட்ச வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர வறுமையை அடையாளம் கண்டு ஒழித்ததாக கேரளா கூறுகிறது.

error: Content is protected !!