News March 18, 2024
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக புதிய வழக்கு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாகப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரையிலான விவரங்களையும் வெளியிட வேண்டும் என ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
Similar News
News September 7, 2025
BREAKING: நாடு முழுவதும் விலை குறைகிறது

GST 2.0 எதிரொலியாக ஹுண்டாய் நிறுவனம், தங்களது கார்களின் விலையை ₹2.40 லட்சம் வரை குறைத்துள்ளது. முன்னதாக, ரெனால்ட், டொயோட்டா, மஹிந்திரா, மாருதி சுசூகி, டாடா மோட்டர்ஸ் நிறுவனங்கள் கார்களின் விலையை குறைத்தன. வரும் 22-ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளது. ஹுண்டாய் நிறுவனம் குறைத்த கார் மாடல்களின் விலையை மேலே உள்ள போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளவும்.
News September 7, 2025
Gpay, Phonepe-ல் வரம்பு ₹10 லட்சமாக அதிகரிப்பு

வரும் செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) தினசரி வரம்பு ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரை தான் அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒரு முறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.
News September 7, 2025
மகளிர் உரிமை தொகை நிச்சயம்: உதயநிதி உறுதி

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்த தகுதியுள்ள மகளிருக்கு நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது 1.20 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில், அது மேலும் அதிரிக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையை அவர் வழங்கினார்.