News March 18, 2024
தென்காசி:அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.மேற்படி கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் “சுவிதா ” என்ற செயலியில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்கள்,கட்சி ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி பெறும் முறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தனர்.
Similar News
News September 5, 2025
கடையம் அருகே திருமண வீட்டில் கொலையா?

தென்காசி மாவட்டம் கடையம் அருகே நேற்று மலையான் குளத்தில் திருமண வீட்டில் உணவு பரிமாறுபதில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன்(40) தள்ளப்பட்டு உயிரிழந்தார். உறவினர் வீட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சு பிடித்து மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
News September 5, 2025
கடையம் அருகே திருமண வீட்டில் கொலையா?

தென்காசி மாவட்டம், கடையம் அருகே மலையான் குளத்தில் திருமண வீட்டில் உணவு பரிமாறுபதில் ஏற்பட்ட தகராறில் ராமச்சந்திரன்(40) தள்ளப்பட்டு உயிரிழந்தார். உறவினர் வீட்டு விழாவில் ஏற்பட்ட மோதலில் நெஞ்சு பிடித்து மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 5, 2025
புளியங்குடி பகுதியில் மின்தடை அறிவிப்பு

நாளை (செப்.6) சனிக்கிழமை புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுகிறது.தி.நா.புதுக்குடி, திருவேட்டநல்லூர், வீரசிகாமணி,அரியலூர், சிங்கிலிபட்டி, சொக்கம்பட்டி, சிந்தாமணி, சுப்பிரமணியாபுரம், பாம்புக்கோவில், சந்தை நகரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.