News October 17, 2024
சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டு சிறை

முதுகுளத்தூர் புளியங்குடியைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன்(24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 2021இல் திருமணம் செய்வதாக கூறி கர்ப்பம் ஆக்கினார். சிறுமியின் தந்தை புகாரின்படி முதுகுளத்தூர் போலீசார் போக்சோ வழக்கில் கோகுல கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மகிளா கோர்ட் நீதிபதி கோபிநாத் மேற்கண்ட கோகுல கண்ணனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Similar News
News August 25, 2025
ராம்நாடு: வீட்டு வரி பெயர் மாத்தணுமா?

ராம்நாடு: நீங்கள் வாங்கிய வீட்டின் பத்திரப்பதிவு வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சல் வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ONGC நிறுவனம் சார்பில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உறைகள் தோண்டுவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி காவிரி – வைகை – கிருதுமால் – குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் இன்று மனு அளித்தனர். கூட்டமைப்பு பொதுச் செயலர் அர்ச்சுணன், வட்டச் செயலர் மலைச்சாமி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
News August 25, 2025
ராம்நாடு: மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

ராமநாதபுரம் மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம். <