News October 17, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் ஒருவரிடம் விசாரணை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பரிடம் விமான நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாத நிலையில், அவருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், அவரை விமான நிலையத்தில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரைக்கும் 25க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News September 13, 2025

சென்னை: 1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ APPLY செய்ய கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 13, 2025

சென்னை: சொந்த வீடு இருக்கா? மாநகராட்சி அறிவிப்பு

image

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான ஏப்ரல் 2025 முதல் செப்.2025 வரை சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 13, 2025

ஆதம்பாக்கம்: பெண் கையை பிடித்து இழுத்தவர் கைது

image

ஆதம்பாக்கம் பெரியார் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (51). இவர் பாஜகவில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த 40-வயது பெண்ணின் கையை பிடித்து இழுத்து, தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதுடன் அதற்கு மறுத்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் நடராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!