News March 18, 2024
ஏப்.13க்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டம்

மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை ஏப்.13க்குள் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வி அதிகாரிகள் இறுதி செய்யவுள்ளனர். அதன் விபரம், இன்று அல்லது நாளை வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 28, 2025
BREAKING: தவெகவில் புதிய குழு அமைத்தார் விஜய்

கரூர் துயரினால் முடங்கியிருந்த விஜய், தற்போது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தவெக அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை அவர் நியமித்துள்ளார். N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 28 பேர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிற்கு தவெக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News October 28, 2025
ஒரே போட்டியில் 8 விக்கெட்.. BCCI-க்கு ஷமி பதிலடி

சர்வதேச போட்டிகளில் தன்னை அணியில் தேர்ந்தெடுக்காததற்கு, ஷமி உள்ளூர் போட்டியில் பதிலடி கொடுத்து வருகிறார். ரஞ்சி டிராபியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், முதல் இன்னிங்ஸில் 3, 2-ம் இன்னிங்ஸில் 5 என 8 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார். இதனால், அவரது பெங்கால் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி டிராபியில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை ஷமி கைப்பற்றியுள்ளார்.
News October 28, 2025
இந்தியாவில் மீண்டும் பயணிகள் விமானம் தயாரிப்பு

இதுவரை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பொதுத்துறை நிறுவனமான HAL, 1988- க்கு பிறகு முதல்முறையாக உள்நாட்டில் பயணிகள் விமானத்தை தயாரிக்க உள்ளது. இதற்காக ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. PM மோடியின் UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவின் 2, 3-ம் நிலை நகரங்களை இணைக்கும் குறுகிய தூர விமான சேவைக்காக, இந்த விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.


