News March 18, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.
◾விளக்கம்: அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
Similar News
News September 15, 2025
முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க 5 டிப்ஸ்

* பகலில் குறைந்தது 2‑3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
* தினமும் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். தூய்மையான துணியால் மென்மையாக உலர்த்தவும்.
* பழங்கள், கீரைகள், புரதம் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடவும்.
* சரியான தூக்கம் (6‑8 மணி) முக்கியம்.
* SPF உள்ள சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்தி சருமத்தை பாதுகாக்கலாம்.
மேலே இந்த குறிப்புகள் படங்களாக உள்ளன. அதை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க.
News September 15, 2025
அதிமுக வாக்குகள் விஜய்க்கு செல்லாது: டி.ஜெயக்குமார்

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த செங்கோட்டையனின் கோரிக்கை குறித்து EPS மட்டுமே முடிவெடுப்பார் என்று டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் படத்தை விஜய் பயன்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எல்லா தலைவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் எம்ஜிஆர்; அவரது படத்தை யாரு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதற்காக அதிமுகவின் வாக்குகள் விஜய்க்கு செல்லாது என்றும் கூறியுள்ளார்.
News September 15, 2025
இனி இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டாம்

டிசம்பரில் இருந்து புதிய ஆதார் செயலி பயன்பாட்டுக்கு வரவிருப்பதாக UIDAI தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ்குமார் அறிவித்துள்ளார். இதனால், பொதுமக்கள் இனி இ-சேவை மையங்களுக்கே செல்லத் தேவையில்லை. தற்போது முகவரி மாற்றுவதை போலவே, செல்போன் எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை இந்த செயலி (face authentication) மூலம் மாற்ற முடியும். இதனால், பயனர்களின் விவரம் தவறாக பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும் என்றார்.