News March 18, 2024
இந்த தடையால் கறுப்பு பணப்புழக்கம் அதிகரிக்கும்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது ஒருவகையில் பொருளாதாரத்தை உயர்த்த உதவுமென மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ’தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதித்தாலும், அரசியல் கட்சிகளுக்கு பணம் வரும். ஆனால் கறுப்பு பணமாக இருக்கும்’ என்றார்.
Similar News
News October 29, 2025
தடுப்பூசி போடுவதால் ஆட்டிசம் ஏற்படுமா?

குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசிகள் ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்துவதாக X-ல் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதை சுட்டிக்காட்டி, இந்திய பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டிருந்தார். அதில் கமெண்ட் செய்த டாக்டர் சிரியாக், இதுபோன்ற பூமர் அங்கிள் சொல்வதை பெற்றோர்கள் கேட்க வேண்டாம், அந்த ஆய்வறிக்கை தடுப்பூசிக்கு எதிரானவர்களால் பணம் கொடுத்து பரப்பபடுவது என்றும் விமர்சித்துள்ளார்.
News October 29, 2025
IPL-க்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுகிறதா?

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், சர்ஃபராஸ்கான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என சசிதரூர் சாடியுள்ளார். ரஞ்சி டிராபியில் ரஹானே, பிரித்வி ஷா, கருண் நாயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், IPL மட்டுமல்லாமல், அனைத்து உள்ளூர் போட்டிகளையும் மதிப்பீடு செய்து வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News October 29, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ஓராண்டில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, அக்டோபரில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI நவம்பர் முதல் குறைகிறது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும்.


