News October 16, 2024

சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்!

image

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து விலகியதால், இன்று எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மேலும், தாழ்வு மண்டலம் சென்னை – நெல்லூர் இடையே நாளை கரையை கடக்கிறது. அப்போதும் கனமழை பெய்யாது என்பதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News August 15, 2025

கடலூர்: 47 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’47’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து, வரும் ஆக.29-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 15, 2025

மதச்சார்பின்மை நீடிக்க சுதந்திர தின வாழ்த்துகள்: விஜய்

image

மதச்சார்பின்மை, சகோதரத்துவம், நல்லிணக்கம் நீடிக்க, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் எனவும் தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக <<17409232>>CM ஸ்டாலின்<<>>, EPS உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News August 15, 2025

குறைபாடு திறமையில் இல்லை.. சாதனை மங்கை துளசிமதி

image

இடதுகையின் பிறவிக் குறைபாட்டால் கட்டை விரலை இழந்தார் அந்தப் பெண். எதிர்பாரா விபத்தால் இடதுகை இயக்கமே கட்டுக்குள் வந்த நிலையிலும், பக்கபலமாக நின்றார் அவரது தந்தை. தனது விடாமுயற்சியால் ஆசிய பாரா போட்டிகளில் பேட்மிண்டனில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் வென்று திறமையை நிரூபித்தார். இப்படிப்பட்ட சாதனை மங்கையான துளசிமதி முருகேசனுக்கு TN அரசு ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

error: Content is protected !!