News March 17, 2024

தர்மபுரி அருகே சோகம்

image

பாலக்கோடு அடுத்த கோவிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 35. இவர் மனைவி தெய்வானை. குடிப்பழக்கம் உடைய கணேசனை கண்டித்து கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மணமுடைந்த கணேசன் கொசு மருந்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை தர்மபுரி ஜி.ஹெச்-சுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 5, 2025

தர்மபுரியில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்ட்டுள்ளனர். ஆயாமரத்துப்பட்டி எழிலரசி, குழிப்பட்டி கோவிந்தசாமி, கெங்கனஹள்ளி சரவணன், பையர்நத்தம் வெங்கடாசலம், பென்னாகரம் விஜயலட்சுமி, கோணங்கிநாயக்கனஹள்ளி ராமகிருஷ்ணன், இராமகொண்டஹள்ளி சுப்ரமணி, மாரண்டஹள்ளி மணிவண்ணன், தர்மபுரி சுரேஷ்குமார் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 4, 2025

தர்மபுரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

image

தர்மபுரி மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!