News March 17, 2024
சோமாலியா கடற்கொள்ளையர்கள் கைது

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேரை இந்திய கடற்படையினர் அதிரடியாக கைது செய்தனர். சோமாலியா கடற்கொள்ளையர்களால் வணிக கப்பல்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரபிக் கடலில் ரோந்து சென்ற இந்திய கடற்படையினர், கொள்ளையர்கள் சென்ற ரூயென் கப்பலை தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக இருந்த 17 பேரை பாதுகாப்பாக மீட்டதுடன், 35 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
Similar News
News April 17, 2025
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. ₹71,000-ஐ கடந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.17) ₹840 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,920-க்கும், சவரன் ₹71,360-க்கும் விற்பனையாகிறது. இது வரலாறு காணாத புதிய உச்சமாகும். அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது.
News April 17, 2025
வாயை கொடுத்து வசமாக சிக்கிய சீக்கா..!

விஜய் சங்கர் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சீக்கா. CSK வீரர் விஜய் சங்கர் மெதுவாக விளையாடுகிறார் என விமர்சனக் கணைகள் ஏவப்படும் நிலையில், மற்ற வீரர்களுக்கு Drinks கொண்டு செல்லத்தான் அவர் தேவை என சீக்கா தன் பங்குக்கு சாடியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள், உங்கள் கமெண்ட்ரிக்கு அவர் எவ்வளவோ மேல் என கமெண்ட் செய்து வருகின்றனர். சீக்கா கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 17, 2025
காங்., தலைவர்களின் மர்ம மரணங்கள்.. அரசுக்கு நெருக்கடி!

காங்கிரஸ் நிர்வாகிகளின் மர்ம மரணங்கள் அரசுக்கு புது நெருக்கடியை கொடுத்துள்ளது. ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். கடந்தாண்டு மே 4-ம் தேதி நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் கருகிய நிலையில், சடலமாகக் கிடந்தார். இந்நிலையில், நேற்று நீலகிரி காங்., தலைவர் <<16113595>>ராஜ்குமார்<<>> மர்மமான முறையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.