News March 17, 2024

RCBvsDC: அரங்கம் நிறைந்த ரசிகர்கள்

image

டெல்லி- பெங்களூரு அணிகளுக்கு இடையேயான WPL இறுதிப்போட்டி, டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால், அருண் ஜெட்லீ மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. போட்டியை காண சுமார் 23,190 பார்வையாளர்கள் இன்று மைதானத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு இணையான ரசிகர் கூட்டத்தை, WPL தொடரும் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

Similar News

News April 13, 2025

ரோஹித்துக்கு ஒரு இன்னிங்ஸ் போதும்: கிளார்க்

image

ரோஹித் போன்ற சூப்பர் ஸ்டாருக்கு, தனது ஃபார்மை நிரூபிக்க ஒரு இன்னிங்ஸ் போதும் என முன்னாள் AUS கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஒரு ஆட்டத்தில் 40- 60 ரன்கள் வரை எடுத்துவிட்டால், அந்த உத்வேகத்தை கொண்டு நிச்சயம் சதம் அடிப்பார் எனவும், அதன்பிறகு அவரது சிறந்த ஃபார்மை பார்க்கலாம் எனவும் கிளார்க் கூறியுள்ளார். நடப்பு IPL-ல் இதுவரை 4 போட்டிகளில் வெறும் 38 ரன்களை மட்டுமே ரோஹித் எடுத்துள்ளார்.

News April 13, 2025

என்னை வைத்து கூட்டணியை உடைக்க முயற்சி: திருமா

image

தன்னை துருப்புச் சீட்டாக வைத்து திமுக கூட்டணியை உடைக்க பலரும் கனவு கண்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். வளைந்து கொடுப்பதால் முறித்துவிடலாம் என முயற்சித்தார்கள், ஆனால் முறிந்துவிடமாட்டேன் எனவும், தான் வளைந்து கொடுப்பவன்தான், ஆனால் அவ்வளவு எளிதாக தன்னை உடைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். சராசரியான அரசியல் நகர்வுகளுக்கு விசிக ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News April 13, 2025

இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை

image

இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. பெரம்பலூர், திருச்சி, காேவை, விருதுநகரில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. இதேபோல், சேலம், தஞ்சை, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

error: Content is protected !!