News October 16, 2024
10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்

பல்லாவரம் அடுத்த பொழிச்சூரில் உள்ள குடியிருப்பு பகுதியில், 10 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள், தீயணைப்பு வீரர்களிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்புகள், விஷ ஜந்துக்களைப் பிடிக்க 044 22200335 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 13, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: முதல்வர் ஆய்வு

தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள் குறித்தும், முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News September 13, 2025
சென்னை: மழைநீரை சேகரிக்க புதிய நுட்பம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 470 எண்ணிக்கையிலான இக்கோ பிளாக்(ECO BLOC) மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல், மழைநீர் நிலத்தடியில் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் வளம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 13, 2025
ஸ்டாலின் முகாம்களில் 7,23,482 மனுக்களுக்கு தீர்வு

இதுவரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அரசின் 15 துறைகளில் பட்டியலிடப்பட்ட 46 சேவைகளில் வரப்பெற்ற 14,54,517 மனுக்களில், 7,23,482 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், தீர்வு செய்யப்பட்ட மனுக்களில், 5,97,534 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், இது தீர்வுசெய்யப்பட்ட மனுக்களில் 83% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.