News October 16, 2024

5797 கர்ப்பிணிகள் கண்காணிப்பு: நெல்லை கலெக்டர்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025 ஜனவரி 14-ஆம் தேதி வரை குழந்தை பிறக்கும் நாள் உள்ள 5797 கர்ப்பிணிகள் கனமழை எச்சரிக்கை வழங்கப்படும் நேர்வுகளில் முன்கூட்டி மருத்துவமனைகளில் சேர்ந்துகொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்பநல இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

நெல்லை: பட்டாவில் பெயர் மாற்றனுமா? இத பண்ணூங்க

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

நெல்லை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

News November 16, 2025

நெல்லை: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!