News October 15, 2024

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா?

image

கடந்த 24 மணிநேர மழையில் ஒட்டுமொத்த சென்னையும் தண்ணீரில் மிதக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 13.23 அடி அளவுக்கு தான் தண்ணீர் உள்ளது. ஆகவே இப்போதைக்கு ஏரி திறக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 2015 அனுபவம் அப்படி!

Similar News

News August 18, 2025

துணை ஜனாதிபதி தேர்தல்.. திமுகவுக்கு புதிய நெருக்கடி

image

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவருக்கு உங்களின் ஆதரவு இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். CPR-க்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், தமிழரை திமுக புறக்கணித்து விட்டதாக சட்டப்பேரவைத் தேர்தலின்போது NDA பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.

News August 18, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

1. சூரியக் குடும்பத்தின் மையத்தை கண்டிபிடித்தவர் யார்?
2. சங்க இலக்கியங்களில் வரலாற்றுச் செய்திகளை அதிகமாக கூறும் நூல் எது?
3. சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் சிக்கிய ஆண்டு எது?
4. ‘சரிகமபதநிச’ என்ற ஸ்வர வரிசை எந்த ராகத்தை குறிக்கிறது?
5. அழகான பெண்ணுக்கு அதிசய வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.. அவள் யார்?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

News August 18, 2025

BREAKING: திமுகவுக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்

image

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என திமுகவிற்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அரசியலாக பார்க்கக்கூடாது. கட்சி பேதமின்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!