News October 15, 2024
மனம் திருந்தி திருடர்கள் செய்த செயல்..!

டெல்லியில் காரை திருடிய திருடர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி பாலம் காலனியை சேர்ந்த வினய் குமார் என்பவர் அக்.10 முதல் தனது காரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அண்மையில் அவரது கார் நம்பர் பிளேட் இன்றி ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரை திருடியவர்கள் கார் திருடப்பட்ட இடத்துடன், மன்னிப்பு கடிதத்தையும் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
Similar News
News August 14, 2025
அரசியல் எதிரிகள் பார்த்த வேலை: தங்கமணி வேதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி திமுகவில் இணையப்போவதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை இருந்த போதும், திருச்சியில் இபிஎஸ் சுற்றுபயணத்துக்காக தான் கட்சிப்பணி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். தன்னை குறித்து வந்த இச்செய்தியை எண்ணி மனவேதனைப்படுவதாகவும், அரசியல் எதிரிகளின் தவறான தகவல் செய்தியாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News August 14, 2025
அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

*சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், அதில் தான் உங்களது வலிமை உள்ளது.
*நீங்கள் மக்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.
*மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.
*உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்.
News August 14, 2025
ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு வழங்க கோரிக்கை

2023-ம் ஆண்டு லண்டனில் சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதனை எதிர்த்து சாவர்க்கரின் பேரன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். புனே நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், ராகுல் வழக்கறிஞர் தரப்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சாவர்க்கர், கோட்சே ஆதரவாளர்களால் ராகுல் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.