News March 17, 2024
தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்கவில்லை

தேர்தல் பத்திரங்கள் மூலமாக எந்த நிறுவனத்திடம் இருந்தும் நிதியுதவி பெறவில்லை என தேமுதிக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் பத்திரங்கள் எதையும் வாங்கவில்லை எனக் கூறியுள்ளார்.
Similar News
News October 20, 2025
போன் Over Heat ஆகுதா? இப்படி சரி பண்ணுங்க!

அளவுக்கு அதிகமாக உபயோகித்தாலோ (அ) போன் ஹாக் ஆனாலோ (அ) கேம் ஆடிக்கொண்டே இருந்தாலோ, போன் அதிகளவில் ஹீட்டாகும். அதை குறைக்க: போனை ஆப் பண்ணி, குளிர்ந்த இடத்தில் வைக்கவும் ➤சார்ஜ் செய்யும்போது, Back Case-ஐ அகற்றுங்கள் ➤Background-ல் செயல்படும் ஆப்களை Close பண்ணுங்க ➤ப்ளூடூத், லொகேஷனை OFF பண்ணுங்க ➤சார்ஜ் பண்ணும் போது, போனை யூஸ் பண்ணாதீர்கள் ➤தேவையற்ற பெரிய கேமிங் ஆப்களை Uninstall செய்யலாம். SHARE.
News October 20, 2025
ALERT: கனமழை வெளுத்து வாங்கும்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களில் நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே சென்னை, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் தீபாவளி கொண்டாட்டம் களையிழந்துள்ளது. உங்கள் ஊரில் மழையா?
News October 20, 2025
இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும்: ராகுல்

தீபாவளியையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும் எனவும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி பொங்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.