News March 17, 2024
சென்னையில் புதிய டாஸ்மாக் கடை மூடல்

சென்னை முகப்பேர் மேற்கு, ரெட்டி பாளையம் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. நேற்று புதிய மதுக்கடை திறக்கபட இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது.
Similar News
News September 22, 2025
சென்னையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை எழும்பூர் அருகே பஸ் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை வடமாநில இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநில இளைஞர் இந்த பெண்ணின் முடியை பிடித்து தாக்குவதை கண்ட அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்தனர். தாக்கிவிட்டு மயங்கியது போல் நாடகம் ஆடிய இளைஞர் சைகோவா அல்லது மதுபோதையில் இப்படி செய்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 22, 2025
BREAKING: சென்னையில் சினிமா இயக்குநர் கைது

சென்னையில் மெத்தப்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்ததாக நடிகரும், சினிமா இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரை சேர்ந்த பவன்குமார், நெற்குன்றதை சேர்ந்த ஹாஷிக் பாஷா, ஆறுமுகம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 12 MDMA மாத்திரைகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News September 22, 2025
‘சென்னை ஒன்’ செயலியை பயன்படுத்துவது எப்படி? 1/1

சென்னையில், பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ, கேப், ஆட்டோ என தனித்தனியாக இனி டிக்கெட் வாங்க வேண்டாம். ‘சென்னை ஒன்’ ஆப் மூலம் ஒரே டிக்கெட்டில் அனைத்திலும் பணயம் செய்யலாம். முதலில் Play storeல் ‘Chennai one’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். செல் நம்பர் உள்ளிட்ட அடிப்படை விவரங்களை பதிவிட்டால் OTP வரும். அதனை கொடுத்து லொகேஷன் ஆன் செய்தால் செயலியை பயன்படுத்தலாம். ஷேர் பண்ணுங்க. <<17791714>>தொடர்ச்சி<<>>…