News March 17, 2024

தேர்தல் பணி வாகனங்களை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்களுக்கான வாகனங்களை இன்று ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி தொடங்கி வைத்தார். இந்தக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளது.

Similar News

News July 8, 2025

காலம் கடந்து நிற்கும் திருவலம் இரும்பு பாலம்

image

ராணிப்பேட்டை அருகே திருவலத்தின் முக்கிய அடையாளமாக ராஜேந்திரா பாலம் உள்ளது. ஆங்கிலேயர்கள் அப்போதே பெண்ணையாற்றின் நீரோட்டத்தை கணித்து , துருப்பிடிக்காத வகையில் பாலத்தை கட்டியுள்ளனர். வித்தியாசமாகவும் ராஜேந்திரா பாலம் திகழ்ந்ததால், இங்கு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் தொடங்கி தனுஷ் வரை பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் எடுக்கப்பட்ட இந்த பாலம் வரலாற்று சின்னமாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜூலை 07)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News July 7, 2025

வெற்றி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (ஜூலை-7) வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, லாட்டரி மற்றும் வெற்றி அழைப்புகள் (Prize Winning Call) போன்றவற்றை உண்மை என நம்பி பணம் கொடுக்கும் மக்கள் மோசடிக்கு ஆளாகக்கூடும். இந்த வகை கைபேசி அழைப்புகள் மூலம் பணம் வற்புறுத்தும் மோசடி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சைபர் மோசடியில் சிக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!