News October 14, 2024
மயிலாடுதுறை கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 ஆம் ஆண்டு மழை , புயல், வெள்ளம் , இடி , மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அனைத்து புகார்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 04364-222588 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் – 04364-1077 என்ற எண்களுக்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி. மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்பத்தாரின் விபரத்தோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW
News August 14, 2025
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வல ஆலோசனை கூட்டம்

சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல் துறை சார்பில் இன்று நடைபெற்றது. டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ராஜா அண்ணாதுரை சுகுணா விஜயா முன்னிலை வகித்தனர். விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.வைத்தீஸ்வரன் கோயில் எஸ்ஐ சூரியமூர்த்தி விழா கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்
News August 14, 2025
மயிலாடுதுறை: VAO லஞ்சம் கேட்கிறாரா? இத பண்ணுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!