News October 14, 2024
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான நீர்த்திறப்பு குறைப்பு

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து நீர்த்திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து 3,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பாசனத்திற்கான நீர் தேவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
சேலத்தில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

சேலம்: சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் “நாட்டுக்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் 26 நாட்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி நாட்களில் விடுப்பு இல்லாமல் காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை பயிற்சி நடக்கவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 99401-78451 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும். இதை உடனே SHARE பண்ணுங்க!
News July 10, 2025
கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கிட வேண்டும்

சேலம் மாவட்டத்தில் ஜூன் 30- ஆம் தேதி வரை 554 பயனாளிகளுக்கு ரூ.14.08 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.2.33 கோடி மானியத் தொகைக்கான கடன் ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டு கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது தொடர்புடைய வங்கிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கிட வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தல்!
News July 10, 2025
அதிமுக பொதுச் செயலாளர் சுவாமி தரிசனம்

சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம் பாளையம் பகுதியில் அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவிலில் இன்று அதிமுகவின் பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.