News March 17, 2024
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை விதிப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து 484 விசைப்படகுகள் நேற்று (மார்ச் 16) காலை மீன் பிடிக்கச் சென்றன. இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து காரைநகர் கொண்டு சென்றனர். இவர்களுக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.17) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News October 17, 2025
ராமநாடு: ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்17)ல் நண்பகல் 2மணி இருந்து 4மணி வரை ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் விபரம் அட்ட வணையில் தரப்பட்டுள்ளது இராமநாதபுரம், பரமக்குடி, திருவாடனை, கீழக்கரை, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதி கொடுக்கப் பட்டுள்ளது எனவே அதன்படி பொது மக்கள் அவசர நிலைக்கு தொடர்பு கொள்ள வேண்டுமென மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.
News October 17, 2025
ராம்நாடு: 2,708 காலியிடங்கள்.. ரூ.57,700 சம்பளத்தில் வேலை

ராமநாதபுரம் மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் https://trb.tn.gov.in/ -ல் சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை வழங்கப்படும். இன்று முதல் 10.11.2025 வரை விண்ணப்பிக்கலாம். மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க