News October 14, 2024
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 89.920 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 52.559 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
Similar News
News July 10, 2025
சேலத்தில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

சேலம்: சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் “நாட்டுக்கோழி வளர்ப்பு” என்ற தலைப்பில் 26 நாட்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி நாட்களில் விடுப்பு இல்லாமல் காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை பயிற்சி நடக்கவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 99401-78451 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும். இதை உடனே SHARE பண்ணுங்க!
News July 10, 2025
கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கிட வேண்டும்

சேலம் மாவட்டத்தில் ஜூன் 30- ஆம் தேதி வரை 554 பயனாளிகளுக்கு ரூ.14.08 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.2.33 கோடி மானியத் தொகைக்கான கடன் ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டு கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது தொடர்புடைய வங்கிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கிட வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தல்!
News July 10, 2025
அதிமுக பொதுச் செயலாளர் சுவாமி தரிசனம்

சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம் பாளையம் பகுதியில் அமைந்துள்ள முத்துமலை முருகன் கோவிலில் இன்று அதிமுகவின் பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.