News October 14, 2024
மீண்டும் MI பயிற்சியாளரானார் ஜெயவர்த்தனே

MI பயிற்சியாளராக ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2017-22 வரை ஏற்கெனவே பயிற்சியாளராக அவர் இருந்துள்ளார். அவரது காலத்தில் 5 முறை MI கோப்பையை வென்றது. இதையடுத்து, அதன் சர்வதேச தலைவராக 2 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். எனவே, தெ.ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் காலத்தில் 2023, 24 ஐபிஎல்லில் அந்த அணி சரியாக விளையாடவில்லை.
Similar News
News August 17, 2025
கூட்டணி குறித்து ராமதாஸே முடிவெடுப்பார்

2026 தேர்தலில் பாமக அதிக இடங்களில் வெற்றி பெறும் நோக்கில், கூட்டணியை முடிவு செய்ய ராமதாஸுக்கே முழு அதிகாரமும் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பாமகவில் புதிய விதி 35 உருவாக்கப்பட்டு, இதன்படி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி, வேட்பாளர்கள் குறித்து ராமதாஸே முடிவெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசிய அஜித்: ஏ.ஆர்.முருகதாஸ்

நடிகர்கள் நேரத்திற்கு சூட்டிங் வருவதே பெரிய விஷயமாக மாறிப்போன நிலையில், நடிகர் அஜித் விபத்தில் அடிப்பட்டு “ஹாஸ்பிடலில்” சிகிச்சையில் இருந்தபோது ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசியதாக ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். நான் உட்பட பல புதுமுக இயக்குநர்களை அஜித்தான் அறிமுகப்படுத்தினார். யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்துள்ளார். எளிதாக இந்த இடத்திற்கு அவர் வரவில்லை எனவும் தெரிவித்தார்.
News August 17, 2025
யார் பாமக தலைவர்: ராமதாஸா? அன்புமணியா?

விழுப்புரத்தில் இன்று(ஆக., 17) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆக., 9-ல் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் ஓராண்டுக்கு அன்புமணி தான் தலைவர் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தான்தான் தலைவர் என தீர்மானம் நிறைவேற்றுவதால் பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.