News March 17, 2024

தென்காசி: தெருநாய்கள் தொல்லை!

image

தென்காசி, சுரண்டை பழைய மார்க்கெட் பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதுடன் அப்பகுதிகளில் செல்லும் பொதுமக்களை விரட்டுவதும் , துரத்தி கடிப்பதுமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மக்களின் நலனை கருதி சுரண்டை நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News August 18, 2025

BREAKING: சங்கரன்கோவில் நகராட்சிக்கு புதிய தலைவர்

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 11:15 மணிக்கு துவங்கியது. சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் கவுசல்யா 22 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 ஓட்டுகள் பெற்றார்.

News August 18, 2025

பாவூர்சத்திரம்: அழகு முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை

image

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் அருணாப்பேரியில் அமைந்துள்ள அழகு முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடிமாதம் முழுவதும் தினசரி காலை மாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஆவணி மாத பிறப்பை யொட்டி இன்று அதிகாலையில் உலக அமைதி வேண்டி கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News August 18, 2025

தென்காசி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!