News March 17, 2024
கோவை முழுவதும் நடவடிக்கை!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன்படி, அண்ணா சிலை சிக்னல் அருகே இருந்த பெருந்தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலை மூடப்பட்டது. மேலும் பல்வேறு மேம்பாலங்களில் வரையப்பட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கை கோவை முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
Similar News
News September 23, 2025
கோவையில் இலவச AI தொழில்நுட்ப பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News September 23, 2025
கோவை: பெண்களுக்கான தையல் பயிற்சி முகாம்

கோவை மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் தொடங்கும் விழா, கணபதியில் இன்று(செப்.23) நடைபெற்றது. இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
News September 23, 2025
கோவை: காருக்குள் ஆண் சடலம் மீட்பு!

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(42). இவர் நேற்று முன்தினம் காரமடை பகுதியில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது, அதிக மது போதை காரணமாக காரமடை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு காருக்குள் உறங்கியுள்ளார். இவருக்கு சர்க்கரை நோயும் இருந்துள்ளது. இந்நிலையில், இவர் இன்று(செப்.23) காரில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.