News March 17, 2024
நாமக்கல் மாவட்டத்தில் 1660 வாக்குச் சாவடிகள்

நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியில் சங்ககிரி இராசிபுரம் சேந்தமங்கலம் நாமக்கல் பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன இவற்றில் 7,04,270 ஆண்கள் 7,39,610 பெண்கள் மற்றும் 156 இதர பிரிவினர் ஆக மொத்தம் 14,44,036 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 1660 வாக்குச் சாவடிகள் உள்ளன என தேர்தல் நடத்தும் அலுவலர் மருத்துவர் ச.உமா தெரித்துள்ளார்.
Similar News
News October 24, 2025
சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தலா?

சேங்கமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவால் அந்த தொகுதி காலியாகி உள்ளது. பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர், ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டால் அல்லது பதவி விலகிவிட்டால் பொதுவாக 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும். எனினும், தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
News October 24, 2025
ராசிபுரம் வக்கீல் சங்க நிர்வாகி பலி!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் மற்றும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காமராஜ் (55).இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டூவீலரில் சென்றபோது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 24, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.23 நாமக்கல்-( தங்கராஜ் – 9498110895) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


