News October 13, 2024
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர (20 செ.மீ.க்கு மேல்) மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு வரும் 16ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News August 21, 2025
காஞ்சிபுரம்: லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..

காஞ்சிபுரம் மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே <
News August 21, 2025
காஞ்சிபுரம்: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

காஞ்சி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
News August 21, 2025
காஞ்சிபுரம் வரும் இபிஎஸ்

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் வி.சோமசுந்தரம் நேற்று (ஆக.20) செய்தி குறிப்பை நேற்று வெளியிட்டார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஆக.21) காஞ்சிபுரம் வருகை தந்து விவசாயிகள், நெசவாளர்கள் சந்தித்து பேசுகிறார். இதனையடுத்து மாலை குமரக்கோட்டம் முருகன் கோவில் அருகில் பொதுகூட்டத்தில் பேசுகிறார். மேலும் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.